கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

ஒரு பனி பொழியும் காலை


ஒரு பனி பொழியும் காலை
அவளின் பவித்திர எழிலை
சுமந்து வந்த செந்நிறக் கதிர்கள்
அவனது இதய வாசலில்
பன்னீர் தெளித்து கோலமிட்டது...
ஒவ்வொரு விடியலும்
தினம் தினம் பூக்கின்றன
அவளின் வாசத்தோடு!
வைகறை மேகங்களில்
சேர்ந்திசைப் பாடல்களை
விடியல் பறவைகள்
பாடும்போதெல்லாம்
அவனது இதயக் கூட்டுக்குள்
ஒரு இனம்புரியாத
நேசப்பறவை சிறகடிப்பதை
உணர்ந்துகொள்ள முடியும்
அவளால் மட்டுமே!

.......கா .ந .கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக