கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், டிசம்பர் 15, 2011

உறவுகளோடு உறவுகளின் பயணிப்பு














சந்தணப் பொட்டிட்டு மாலை அணிவித்து
மாப்பிள்ளையை வரவேற்கும்
மைத்துனராக மணமகளின் சகோதரன்!
மணப்பெண்ணின் அலங்காரத்தில்
முழுதுமாய் அக்கறை செலுத்துகின்ற
தாய் வீட்டு சொந்தங்கள் !
புதிய உறவில் தடம் பதிக்கும்
சம்பந்திகளின் சம்பந்த நலுங்கு!
மணப்பந்தலில் கைவிளக்கேந்தி நிற்கும்
நாத்தனாராக மணமகனின் சகோதரி !
மங்கல நாண் அணியும்முன்
மணமகளை மடிமீது
அமர்த்திகொள்ளும் தாய் மாமன் !
அட்சதை அனைவரிடமும் கொடுத்து
மங்கல மனைமாட்சிக்கு
ஆசி கேட்கும் மாமன் மைத்துனர்கள் !
சீர்வரிசை முறையாக
கொடுத்து மகிழும் தாய் !
மருமகன் மருமகளை தன்மக்களாக
ஏற்றுக்கொள்ளும் மாமனார் மாமியார் !
கணவனே கண்கண்ட
தெய்வமென்று மனைவியும்…
மனைவி சொல்லே
மந்திரமென கணவனும்….
மாதா பிதா குரு
தெய்வமென பிள்ளைகளும்…..
இப்படியே உறவுகள் நமது பயணிப்பில்
இறுதிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது….
பாசம் எனும் முகமூடி அணிந்தவாறே..... !


.......கா.ந.கல்யாணசுந்தரம்