கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

காலையும் மாலையும்

கிராமத்து அத்தியாயங்கள்தான்
ஒரு சரித்திரம் படைக்கும் சித்திரங்கள் !
அகன்ற மண் தெருக்களில் வெள்ளநீர்
மழைநாளில் சிறுவர்களின்
காகிதக் கப்பல் விடும்
ஆற்றுப் படுகையானது!
கிராமத்து கிழக்கு வாசல்
அம்மன்கோயில் அனைவர்
வாழ்வோடு பக்திநெறி வளர்த்தது!
ஆலமரத்து நிழல் குடை
பாடித் திரியும் பறவைகள் சரணாலயம் ஆனது!
கிராமத்து திண்ணைகள் ஒரு
பாரம்பரியத்தின் சொத்தானது!
மனிதநேயம் வளர்த்த
மாண்புறு மேடையானது!
காலையும் மாலையும்
கிராமத்தின் எழிலார்ந்த ஓவியமானது!
வயல் பரப்பு ஒற்றையடிப் பாதைகள்
விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்தன!
கிராமங்கள் நகரமாகி நரகமாகும் நிலை
இனிவேண்டாம் !
படித்துப் பட்டம் பெற்றாலும்
ஏர்ப்பின்னதுதான் உலகம் என்றுணர்ந்து
இயற்கையோடு இயந்து வாழ வாருங்கள்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக