கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், பிப்ரவரி 06, 2012

அசையாதா அரசியல் தேர்.....

சோழர் கால உத்திரமேரூர்
கல்வெட்டு செப்புகின்ற
மக்களாட்ச்சியின் மகிமை
நாடறிந்த ஒன்று!
இடிப்பார் இலாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் எனும்
குரள்மொழி இன்றும் கோலோச்சுகிறது!
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்தான்
இதுதான் விதியென மக்கள் நினைத்து...
வாழும் அவல நிலை இன்றும் உளது!
ஊழலின் வித்தாக அரசியல் கண்டோர்
உலவும் மாநிலத்தில் மக்களாட்சி,
மாற்றம் எப்போதும் கண்டதில்லை!
அடிபணியும் மக்களும் அதிகார வர்க்கமும்
புற்றீசலாய் புவிமீது எப்போதும்!
பொதுஉடைமைக் கொள்கைதனை
போதிக்கும் காந்தி இனிபிறப்பினும்,
ஆதரிக்கும் அரசியலாரைக் காண்பதறிது!
இளைய சமுதாயமே! இனி பொறுத்தது போதும்
பொங்கி எழுவென்று குரல்கொடுப்பினும்....,
எல்லோரும் ஏங்குகின்றனர்....
நல்லதொரு சமுதாயம் பிறப்பெடுக்க,
மக்களாட்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி பிறந்திட,
அசையாதா அரசியல் தேர் இனியேனும் !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

வேரை மறந்த விழுதுகள்....

ஆல் போல் தழைத்து
அருகுபோல் வேரூன்றி
பல்லாண்டு வாழ்கவென
வாழ்த்தும் பெரியோர்கள்
முத்திரைப் பதித்தனர்! -கனணியுக
வாழ்வுதனில் கால்பத்தித்த இளைஞர்கள்
தேடலே வாழ்க்கையென
பொன்னான மனிதநேய
வாழ்வுதனை தொலைக்கின்றார்!
இயந்திரமாய் இயங்குகிற
உலகமதில் உழன்றுழன்று முடங்கும்
தெளிவற்ற சிந்தனையில்- வயோதிகர்
உளமதனைஅறிந்திடாமல்
அறிவிழப்போர் ஏராளம்!
பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுதனை
செல்லரிக்கா விழுதெனவே வளர்த்து
சுயவளர்ச்சி காணாத பெற்றோர்கள்
வலுவிழந்து வீழுகின்ற
சூழலை நாம் காணுகின்றோம்!
காப்பகங்கள் சாலைதோறும்
தோன்றிற்று இந்நாளில்!
வயது முதிர்ந்தாலும்
அனுபவப் பெட்டகங்கள்
பயனின்றி காப்பகத்தில்
வாழும் நிலை அறிவோம்!
நல்லதொரு குடும்பம்
பல்கலை என்பதனை நிலை நிறுத்த,.
வேரை மறந்த விழுதுகளை இனங்கண்டு
தரையைத் தொடவைப்போம்! - ஆல்
தழைத்து அனுபவத்தை பகிர்ந்திடவே!

.........கா..கல்யாணசுந்தரம்.

( நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்)