கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், நவம்பர் 06, 2012

தேடல்...





ஒரு பகல் பொழுதின்
ஆளுமையில்
அவனின் பலம் அனைத்தும்
இழந்த நிலையில்
கைகளில் திணிக்கப்படுகின்றன ...
இன்றைய
பொழுதுக்கான சம்பளம்!
ஆள் அரவமற்ற
தெருவோரத்து குடிசைக்குள்
கால்கள் சற்றே
ஓய்வெடுத்தன ....
மல்லாந்து படுத்த
அவனது கண்களுக்கு
கோளரங்கம் ஆனது
குடிசையின் கூரை!
அடுத்த நாளின்
நகர்தலுக்கான தேடல்...
மனதுக்குள்
ஏக்கப் புள்ளிகளுடன்
கோலமிட்டன....
வாசல் இல்லாத
அவனது வீட்டின்
முற்றத்தில்....!



.....கா.ந.கல்யாணசுந்தரம்