அகமும் புறமும்
என்னவென்று அறியாமலே
கலிங்கத்து பரணிக்கு
உரை எழுதுபவர்கள் !
நெல்லிக்கனியின்
சுவையறியாது
அதியாமானின்
வள்ளல்தன்மைக்கு
மகுடம் சூட்டுபவர்கள் !
ஆறாம் அறிவை
அடகுவைத்துவிட்டு
ஏழாம் அறிவை அலசுபவர்கள் !
இவர்களெல்லாம் ....
வெளிச்சத்துக்கு விளக்கு
ஏற்றுபவர்கள் !
வெளிச்சப்பார்வையில்
இவர்களெல்லாம்
இருளின் சொந்தக்காரர்கள் !
சமுதாயப் புத்தகத்தின்
முகவரியைக் கூட
படிக்கத் தெரியாத
சுயநலவாத
கூட்டமைப்பின்
கொள்கைச்செம்மல்கள் !
வாக்கு வங்கிகளை
கொள்ளையடித்து ....
மக்களாட்சியின் மகிமைக்கு
மலர்வளையம் வைப்பவர்கள்!
சுதந்திர தினம் ஆண்டுதோறும்
கொடியேற்றத்தில் மட்டுமே
கொண்டாடப்படுகிறது!
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகளை
கட்டவிழ்த்துவிடுவோரை
இனம்கண்டும் ...
ஆர்த்தெழாத மானுடம்
எப்போது கண்டெடுக்கும்
இன்னொரு காந்தியை ?
..........கா.ந.கல்யாணசுந்தரம்
இது நான் நீண்ட காலமாக காத்திருந்த ஒன்று என்று நான் சொல்ல வேண்டும்.
பதிலளிநீக்குpdms admin course in chennai
pdms training
pdms admin training
pdms training in india
pdms training in chennai
Pdms design in chennai
pdms course
pdms admin training in chennai
pdms design
pdms training centre in chennai
Pdms course in india
pdms admin course
Pdms course in chennai
Pdms in chennai