கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஏப்ரல் 14, 2014

தமிழ் நவின்று தழைத்திடுங்கள் பல்லாண்டு!










முத்தமிழின் சுவையுணரும் 
இளங்காலை நேரம் !

இத்தரையை மகிழ்விக்கும் 
சுகமான காலம் !
சித்திரை எனும் 
முத்திரை பதித்த மாதம்!
மல்லிகை மலரோடு 
மாவிலைத் தோரணம் அசைந்தாட 
மெல்லிசையாய்  
தமிழ் பேசும் மழலை மொழி !
உற்றோரும் பெற்றோரும் 
பெற்றெடுத்த தமிழ்மண்ணின் 
வரலாற்றை வளமோடு காத்திட்டு 
வளர்கின்ற தலைமுறைக்கு
தாய்மொழியை அமுதாக..... 
என்றென்றும் தந்திடுவோம்  தரமாக !
ஜெய ஆண்டின் வருகையிலே 
இதய மகிழ் தமிழ் வாழ்த்து 
இயம்புகிறேன் .... தமிழ் நவின்று 
தழைத்திடுங்கள்  பல்லாண்டு! 

........... கா.ந.கல்யாணசுந்தரம்.

2 கருத்துகள்:

  1. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
    வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பர்களே
    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    பதிலளிநீக்கு