கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஆகஸ்ட் 24, 2011

விழுப்புண்கள்

முழு மனதோடு
நம்மை
ஏற்றுக் கொள்ள
யாராவது
இருக்கிறார்களா
என ஏக்கத்துடன்
காத்திருக்கின்றன
தோல்விகள்!
காரணம்...
அவைகள்
வெற்றிக்கான
விழுப்புண்கள் என
நம்மால்
அடையாளம்
காணாததால்!

நம்மை நாமே....

நம்மை நாமே
தயார் படுத்திக்
கொள்ள வேண்டும்
மற்றவர்களின்
மகிழ்ச்சியான
வாழ்க்கைப்
பயணத்திற்கான
வழிகாட்டுதல்களில்
களமிறங்க!

ஏனென்றால்

மலையின்
முகடுகளை
நோக்கித்தான்
எப்போதும்
செல்கின்றன
வெற்றிக்கான பாதைகள்
ஏனென்றால்
அவை நம்மை
இறக்கிவிடும் போது
முகம்காட்ட
மறுக்கின்றன!

நட்புக்கான.........

எப்போதும்
நம்மைச் சுற்றி
நல்லவர்கள்
இருக்கிறார்கள்
என்றே நினைப்போம்
அப்போதுதான்
மனித உறவுகள்
மேம்பட
நம்மிடம்
நிலைத்திருக்கும்
நட்புக்கான
பணிமனை!

காத்திருப்பாக இருக்கட்டும்!

தன்னுடைய
முதிர்வினை
அறிவிக்கும் வரை
காத்திருப்போம்
நமக்கான
வெற்றிக்கனியை
பறிப்பதற்கு
இதுவும்
நமது
குறிக்கோளின்
காத்திருப்பாக
இருக்கட்டும்!

நட்பின் இலக்கணம்

பிரித்து எழுதி
பொருள் கூற
முடியாததுதான்
நட்பின் இலக்கணம்
இருந்தாலும்
வெளிப்படையான
உணர்வுகளால்தான்
பலமாகிறது
நட்பின்
இளமைக் காலங்கள்!


.......கா.ந.கல்யாணசுந்தரம்.