கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, நவம்பர் 23, 2014

புலம்பெயரும் நிழல்கள்....








விழுதலும் எழுதலும்
மானுடம் சந்திக்கும்
நிகழ்வுகள்...
அடிபட்ட காயங்களை
ரணமாக்கவே
சமுதாயம்
விரும்புகிறது....
மாற்று மருந்தொன்று
இருப்பதாய் தெரியவில்லையென
என்னுடன் கீழே
விழுந்தும் அடிபடாத
நிழல்  புலம்பியவரே
இடம்பெயர்கிறது....


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், நவம்பர் 03, 2014

பகிர்ந்தபோது!

நெஞ்சம் நிறைந்தது
அகழ்ந்த கிழங்கை
பகிர்ந்தபோது!

............கா.ந.கல்யாணசுந்தரம் 

சனி, நவம்பர் 01, 2014

அன்பெனும் சிறைக்குள்....





நினைப்பதை அப்படியே 
சொல்ல முடியவில்லை ...
சொல்வதற்கு முன் 
யோசிப்பது  முக்கியம் என்று 
யாரோ சொல்லி வைத்தார்கள் !
சிந்தனைகள் நமக்கு 
சொந்தமானவைதான்....!
ஆனால் வார்த்தைகள் மட்டும் 
நமது கட்டுப்பாட்டில் 
இருப்பதில்லை ....!
விடுதலையாகும் சிந்தனைகள் 
மற்றவர்களை சிக்க வைக்கட்டும் .... 
நம் அன்பெனும் சிறைக்குள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.