கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஜூன் 13, 2015

இறைவன் வாழ்கிறான்

இயற்கையின் மாண்பில்
இறைவன் வாழ்கிறான்
நயாகரா நீர்வீழ்ச்சி !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


செவ்வாய், ஜூன் 09, 2015

இன்பம் பருகும் வாழ்நாட்கள் !









இசையுலகின் இணையிலா மேதை !
இறைவனின் இசை அவதாரம் !
இயற்கையின் இதயத்தை தொட்டவன் !
இயல்பின் வெளிப்பாடுகளில்
இமயத்தை முத்தமிட்டவன் !
இலங்கும் புவிமீது இசையின்
இலக்கணத்தை வடித்தவன் !
இன்றல்ல நேற்றல்ல என்றும்
இசையுலகின் சக்கரவர்த்தி !
இளையராஜா - எங்களின்
இதயம்கவர் கள்வன் !
இந்தியத்தாய் பெற்றெடுத்த
இணையிலா தவப்புதல்வன்
இன்னும் இன்னும் வேண்டும்
இவனின் இசை கேட்டு
இன்பம் பருகும் வாழ்நாட்கள் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.

அவளின் புரிதல் இலக்கணம் !




ஒரு விரல் தொட்டதும் 
நெஞ்சம் இனித்தது ............
அவளின் புரிதல் இலக்கணம் !

........கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், ஜூன் 08, 2015

எனது எண்ண ஓட்டங்களாக பகிரப்பட்டவை......



தலைப்பைச் சேருங்கள்











படுத்து உறங்காமல்
இளைப்பாற வாருங்கள்...
நிழல்தரும் மரங்கள் !

வற்றிய குளத்தை
முத்தமிட வா....
கோடை மழையே !

தோகை விரித்த மயிலுக்கு
குடைபிடித்தன....
கரு மேகங்கள் !

தென்றலுடன் கைகோர்த்து
நல்லிசை வழங்கின...
வண்டு துளைத்த மூங்கில்கள் !

புதியதாய் துளிர்த்தலில்
ஒரு மௌனித்த பயணம் ...
நேற்றைய உதிர்தல் !
........கா.ந.கல்யாணசுந்தரம்.