கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

நவயுக பெண்தான்..........

·        முன்னோர் வகுத்த 
     நெறிமுறையில் ஒரு
மரபின் கலாச்சாரம்

·        சுமைகளின் பகிர்வால்
ஒரு புரிதலின் உண்மை
பூத்துக் குலுங்கும்

·        உனது நிராகரிப்பு இருப்பின்
வக்கிரங்கள் அரங்கேறலாம்
கலந்துரையாடலே விடிவெள்ளி

·        பருவத்தின் பாரம்பரியம்
காதல் வயப்படுதல்
அது ஒருதலையாகவும் இருக்கலாம்

·        அன்போடு நிலைப்பாட்டை
எடுத்தியம்பு
இல்லையேல் காலம்தாழ்த்தாது
காவல்துறையை அணுகு

·        உன்னைப் பின்தொடர்பவர்கள்
எதற்காக என்பதறிவாய்
பாதுகாப்பு வளையத்துக்குள்
வாழக்  கற்றுக்கொள்

·        நவயுக பெண்தான்
ஒப்புக்கொள்கிறேன் ....
நண்பனை தேர்வுசெயும்முன்
ஆய்வுசெய் அவனது நட்புகளை !


........கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.